
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில், ரயில்களில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதற்காக, 96 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிந்து, அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது.
இங்கிருந்து வடமாநிலங்கள், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. இதுதவிர, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில் நிலையத்தில் தினசரி 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.