
சென்னை: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணியாகச் சென்றனர்.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பேரணியும் நடைபெற்றது.