
புதுடெல்லி: டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்தவர் எல்விஷ் யாதவ் (27). பாடகர், யூ டியூபர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்ட அவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.
அவரது யூ டியூப் சேனலில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இதுவரை 13 இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டு உள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.