• August 18, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் 6,408 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,223 கனஅடியாக குறைந்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக இருந்த நிலை​யில், நேற்று காலை நீர்​திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடி​யாக​வும், மாலை​யில் 22,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 118.25 அடி​யாக​வும், நீர் இருப்பு 90.70 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *