• August 18, 2025
  • NewsEditor
  • 0

தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்​தின் மொழி, இன உணர்​வு​களை அணை​யாமல் பார்த்​துக் கொள்​கிறார் ஆளுநர் ஆர்​.என்​.ரவி என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். தரு​மபுரி அடுத்த தடங்​கம் ஊராட்​சி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், ரூ.363 கோடி​யில் முடிவுற்ற 1,073 திட்​டங்​களை திறந்​து​வைத்த முதல்​வர் ஸ்டா​லின், ரூ.513 கோடி​யில் 1,044 பணி​களுக்கு அடிக்​கல் நாட்டி வைத்​தார். மேலும், 70,427 பயனாளி​களுக்கு ரூ.830 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: ஒகேனக்​கல் கூட்​டுக் குடிநீர் திட்​டம் உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களை தரு​மபுரிக்கு தந்​தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.447 கோடி​யில் 43.86 லட்​சம் பயனாளி​களுக்கு நலத் திட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *