• August 18, 2025
  • NewsEditor
  • 0

திரு​வண்​ணா​மலை: திட்​டங்​களுக்கு பெயர் வைத்​துக்​கொள்​வ​தில் முதல்​வர் ஸ்டா​லினுக்கு இணை​யில்​லை. 4 ஆண்​டு​களாக நிறைவேற்​றாத திட்​டங்​களை, 7 மாதங்​களில் நிறைவேற்​றப் போகிறார்​களா என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறினார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் திரு​வண்​ணா​மலை, கீழ்​பென்​னாத்​தூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

திரு​வண்​ணா​மலை அண்ணா சிலை அருகே நேற்று முன்​தினம் இரவு பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: திரு​வண்ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயிலை தொல்​லியல் துறை கைப்​பற்ற முயன்​ற​போது எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதி​மன்​றம் வரை சென்​று, கோயிலை மீட்​டெடுத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *