• August 18, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​சா​திய படு​கொலைகளை விசா​ரிக்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். திருநெல்​வேலி​யில் ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை செய்​யப்​பட்​டதைக் கண்​டித்​து, புதிய தமிழகம் கட்சி சார்​பில் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி தலைமை வகித்​தார். நிர்​வாகி ஷியாம் கிருஷ்ண​சாமி முன்​னிலை வகித்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் கிருஷ்ண​சாமி கூறிய​தாவது: ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை விவ​காரத்​தில் சிபிசிஐடி விசா​ரணை மூலம் தீர்வு கிடைக்​குமா என்று தெரிய​வில்​லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும். நான் எம்​எல்​ஏ​வாக இருந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நூற்​றுக்​கணக்​கான சாதிய படு​கொலைகள் நிகழ்ந்​துள்​ளன. அப்​போது இருந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்​காத​தால், தற்​போது வரை இது தொடர்​கதை​யாகி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *