
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் முரளிசங்கர், மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேடையில் ராமதாஸுக்கு அருகிலேயே, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர்ந்திருந்தார். கவுரவத் தலைவர் ஜி.கே. மணி தீர்மானங்களை வாசித்தார்.