• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலைநிமிர்​வுக்​காக தொடர்ந்து களத்​தில் நிற்​போம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். விசிக தலை​வர் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, சென்னை காம​ராஜர் அரங்​கத்​தில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற கருப்​பொருளு​டன் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்தி பேசினர்.

இதில் ஏற்​புரை நிகழ்த்தி திரு​மாவளவன் பேசி​ய​தாவது: விசிக என்​பது தமிழகத்​தின் தவிர்க்க முடி​யாத சக்​தி, தமிழகத்​தின் எதிர்​காலம் என்​ப​தை, இந்த விழா​வில் பங்​கேற்ற ஒவ்​வொரு​வரும் ஆற்​றிய உரை உறு​திப்​படுத்தி உள்​ளது. நாம் மேலும் தீவிர​மாக செயல்பட வேண்​டும் என்ற உணர்வை இது தரு​கிறது. ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலை நிமிர்​வுக்​காக நாம் களத்​தில் நிற்​கிறோம், தொடர்ந்து நிற்​போம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *