
சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர்.
பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.