• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – அமெரிக்கா இடையே, இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கக்​கூடிய வர்த்தக ஒப்​பந்​தத்தை எட்​டு​வதற்கு மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள முயற்​சிகளை பாராட்​டு​கிறேன். தேசிய நலன்​களை பாது​காப்​ப​தற்​கான மத்​திய அரசின் நிலைப்​பாட்டை முழு​மை​யாக ஆதரிக்​கிறேன். அதே​நேரம், அமெரிக்​கா​வின் 25 சதவீத வரி​வி​திப்பு மற்​றும் அதன் தொடர்ச்​சி​யாக 50 சதவீத​மாக வரி அதி​கரிப்பு காரண​மாக கடும் தாக்​கங்​களை எதிர்​கொள்​வ​தால், தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள கவலை அளிக்​கும் பிரச்​சினை குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *