
சேலம்: “தூய்மைப் பணி என்பது நிரந்தரமானது என்று சொன்னால், அவர்களுடைய பணியும் நிரந்தரமாகவே இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையும் 100 சதவீதம் நியாயமானது. தொழிலாளர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அரசு செயல்படுமானால், அதை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள். அதுதான் எங்களுடைய கடமை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார்.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியது: “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அனைத்து தொந்தரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மாநில உரிமைப் பறிப்பு, நிதி ஒதுக்கிட்டு பாரபட்சம், வரியில் பாரபட்சம் காட்டப்படுகிறது.