
பாட்னா: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை முதல் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ தொடங்கவுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், “நாளை சசாரமில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரை இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக ஓர் உத்வேகத்தை உருவாக்கும்.