
பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி, சமூகப் பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து, சமூக செயல்பாட்டாளராக இருந்தார். அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தார்.
இது குறித்து கஸ்துரி அளித்த பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் பேச்சு சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் உள்ளிட்ட எதுவுமே இல்லை. சுதந்திரமாக உயிர்வாழ கூட முடியவில்லை. சமீபமாக நடந்த பல சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை எதிர்த்து குரல் கொடுக்கும் போது, ஆளுக்கட்சி தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வந்தது.