
பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படும் மின்சார ரயில்களின் காலிபெட்டிகளை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில் நிறுத்தி வைப்பதால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.