
பாட்னா: பிஹாரில் தொழில்களை மேம்படுத்தவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் கீழ், 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் இலக்கை எங்கள் அரசாங்கம் நிறைவேற்றியது.