• August 16, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு திருவள்ளூர் மாவட்​டங்​களில் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.
சுதந்​திர தினத்தை முன்​னிட்டு காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கீழம்பி ஊராட்​சி​யில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

இந்த ஊராட்​சி​யில் 16 தீர்​மானங்​கள் வாசிக்​கப்​பட்​டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணி​யாளர்​களுக்கு பொன்​னாடை போர்த்தி கவுர​வித்​தார். பொது​மக்​களிடம் இருந்​தும் மனுக்​களை பெற்றார். இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட வரு​வாய் அலு​வலர் செ.வெங்​கடேஷ், காஞ்​சிபுரம் ஒன்​றிய குழுத்​தலை​வர் மலர்க்​கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்​தலை​வர் நித்​தியா சுகு​மார் உட்பட பலர் பங்​கேற்​றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்​பர​நாதர் கோயி​லில் சமபந்தி விருந்து நடை​பெற்​றது. இதில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *