
அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்குவதற்காக அந்தத் தொகுதியை சுற்றிச் சுற்றி வருவதாகவும் கடந்த முறை இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுத்த அதிமுக, இம்முறையும் அதற்கு தயாராக இருப்பதாகவும் நேற்றைய ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழிதேவன்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
அந்தச் செய்தியில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனின் கருத்தையும் நாம் பதிவு செய்திருந்த நிலையில், செய்தி வெளியான பிறகு நம்மை தொடர்பு கொண்ட கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஐடி விங்க் செயலாளரான பி.டி.முத்தமிழ்ச்செல்வன், “அமைச்சர் கணேசனும் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனும் பள்ளித் தோழர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. இருவரும் ஒரே பள்ளியில்கூட படிக்கவில்லை என்பது தான் உண்மை.