
சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையினர் அண்ணா சாலையில் (தேனாம்பேட்டை சிக்னல் – அண்ணா அறிவாலயம் பகுதிக்கு இடையே உள்ள பகுதி) 3.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர்.
இந்த கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே நாளை (17-ம் தேதி) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.