
சென்னை: கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்ட இந்நாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளான கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.