• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகள் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் சென்​னையி​லிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாக​னப் பேரணியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் தமிழ்​நாடு முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகள் விரை​வில் நடை​பெற இருக்​கின்​றன.

இதில் நடத்​தப்​படும் மாவட்ட அளவி​லான 25 வகை​யான போட்​டிகள், மண்டல அளவி​லான 7 வகை போட்​டிகள், மாநில அளவி​லான 37 வகை விளை​யாட்​டுப் போட்​டிகளில் 19 வயதுக்​குட்​பட்ட பள்ளி மாணவர்​கள், 25 வயதுக்​குட்​பட்ட கல்​லூரி மாணவர்​கள், 15 வயது 35 வயது வரையி​லான பொதுப் பிரி​வினர், அரசுப் பணி​யாளர்​கள் மற்​றும் அனைத்து வயது மாற்​றுத் திற​னாளி​கள் பங்​கேற்​க​வுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *