• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் உள்ள மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களில் நேற்று 79-வது சுதந்​திர தினம் தேசி​யக் கொடியேற்றி விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. விழா​வில், சிறப்​பாகப் பணி​யாற்றி ஊழியர்​களுக்கு பரிசுகளும் வழங்​கப்​பட்​டன. சென்னை, கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணி​யாளர்​களின் குழந்​தைகளுக்கு அவர் சுதந்​திர தின வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். லட்​சுமி ரவி உடனிருந்​தார். தொடர்ந்து காந்தி மண்​டபத்​தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்​கும் ஆளுநர் மரி​யாதை செலுத்​தி​னார்.

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ஆளுநர் மாளிகையில்
தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, தேசி​யக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்​எப் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றார். நிகழ்​வில், நீதிப​தி​கள், ஓய்வு பெற்ற நீதிப​தி​கள், சட்​டத்​துறை அமைச்​சர் ரகுப​தி, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன்​முகமது ஜின்​னா, மாநில அரசு ப்ளீடர் எட்​வின் பிர​பாகர் உள்​ளிட்ட அரசு வழக்​கறிஞர்​கள், தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால், சென்னை காவல் ஆணை​யர் அருண் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *