
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தான் ராணுவம், நமது ராணுவ தளங்கள், விமானப் படைத்தளங்கள்,வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது.
அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் நடுவானில் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் சிறிய சேதத்தைக்கூட ஏற்படுத்த முடிய வில்லை. வரும் 2035-ம் ஆண்டுக்குள் மருத்துவமனைகள், ரயில்வே கட்டமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதிய தொழில்நுட்ப தளங்கள் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.