
புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்திரம் அடைந்தது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நம்மை அரசியலமைப்பு சட்டம் வழிநடத்தி வருகிறது.