• August 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *