
புதுடெல்லி: இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை அனுப்பி உள்ளார். அதில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தகுதிவாய்ந்த மரியாதைக்குரிய நாடாக விளங்குகிறது.