• August 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பிரதமர் மோடி​யின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறி​விப்பு மகிழ்ச்சி அளிக்​கிறது என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார்.

மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிரதமர் சுதந்​திர தின விழா உரை​யில், தீபாவளிப் பரி​சாக ஜிஎஸ்டி வரி விதிப்​பில் மாற்​றம் செய்​யப்​படும் என்று அறி​வித்​துள்​ளது மகிழ்ச்சி அளிக்​கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்று நாங்​கள் வலி​யுறுத்​துகிறோம். பிஹார் தேர்​தலை மனதில் வைத்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது என்​றாலும்​கூட, அது மக்​களுக்​குப் பயனுள்​ள​தாக அமை​யும் என்​ப​தால் வரவேற்​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *