
ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர்.
இந்திய கடலோரக் காவல்படை முகாம் சார்பில் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது. அப்போது ஃஹோவர் கிராப்ட் ரோந்துப் படகில், தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கொடியேற்று விழா நடைபெற்றது.