
சென்னை: அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து தாயுமானவர் திட்டமாக திமுக செயல்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்சியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு பிப். 19-ம் தேதி சமர்ப்பித்த தமிழக பட்ஜெட்டில் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.