• August 16, 2025
  • NewsEditor
  • 0

மேலக்கோட்டையூர்: விஐடி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மேலக்கோட்டையூர் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, ‘சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக்கொள்ள வேண்டும்’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னிலை வகித்தார். இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *