
மதுரை: ”நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படை காரணமாக திகழ்கிறது” என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சுதந்திர தின விழாவில் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில், மேயர் இந்திராணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவுக்கு ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.