• August 15, 2025
  • NewsEditor
  • 0

சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் அடுத்தகட்ட விசாரணை அதுகுறித்தும் நகர்வதாகச் சொல்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் துணையோடு பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துவரி முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்ததால் மண்டலத் தலைவர்கள் அனைவரிடமும் அவசரகதியில் ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கியது திமுக தலைமை. தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *