
புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது சுமார் 103 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.
இதுவரையிலான அவரது சுதந்திர தின உரையில் இது நீண்டதாகும். முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்ததாக அதிக சுதந்திர உரையாற்றி பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரது சுதந்திர தின உரை ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம்.