• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்​து, தேர்​தல் ஆணை​யம் வாக்கு திருட்​டில் ஈடு​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்​றம் சாட்டி வந்​தார். கடந்​தாண்டு நடை​பெற்ற மக்​களவை தேர்​தலில் மத்​திய பெங்​களூரு மக்​களவை தொகு​தி​யில், உள்ள மகாதேவ்​புரா சட்​டப்​பேரவை தொகு​தி​யில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​கு​கள் திருடப்​பட்​ட​தால், காங்​கிரஸ் வேட்​பாளர் தோல்​வி​யுற்​றார் என அவர் குற்​றம் சாட்​டி​னார்.

இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு​வருக்கு ஒரு ஓட்டு என்ற நடை​முறை கடந்த 1951-52-ம் ஆண்டு தேர்​தலில் இருந்து உள்​ளது. தேர்​தலில் யாராவது 2 முறை வாக்​கு​கள் அளித்​திருந்​தால், அதற்​கான ஆதா​ரத்தை தேர்தல் ஆணை​யத்​துடன் பகிர வேண்​டும். அதை​விடுத்து வாக்​காளர்​கள் அனை​வரை​யும் திருடர்​கள் என கூறக் கூடாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *