• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய காலத்​தில் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​டங்​களின் செய​லாக்​கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் சென்னை தலை​மைச்​ செயலகத்தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக ஆய்வு நடத்​தி​னார்.

கூட்​டத்​தில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மக்​களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரு​வதை தொடர்ந்​து, இதற்​காக நன்கு திட்​ட​மிட்​டுப் பணி​யாற்றி வரும் மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் அனைத்​துத் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார். அதே​போன்​று, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​ட​மும் மிகச் சிறப்​பாக நடை​முறைபடுத்​தப்​பட்டு வரு​வ​தால், அதற்​கான பணி​களில் ஈடு​பட்டு வரும் சுகா​தா​ரத்​துறை சார்ந்த மருத்​து​வர்​கள் மற்​றும் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *