
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது துணிச்சலுடன் போரிட்ட, எல்லை பாதுகாப்பு படையின் 16 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு துணிச்சலுடன் செயல் ஆற்றிய வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டனர். இவற்றை எல்லை பாதுகாப்ப படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.