
பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்ததாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி கன்னட நடிகர் தர்ஷன் (44) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்ஷனின் முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக கடந்த அக்டோபரில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பரில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.