
புதுடெல்லி: சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
இதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.