
சென்னை:உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.