• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார்.

இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கைகள் மற்​றும் ஒரு காலில் முறிவு ஏற்​பட்டு படு​கா​யம் அடைந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணை​யர் டி.சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *