• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரும் மனு மீது மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும், அரசி​யல் சாசனத்​தின் 370-வது சட்​டப் பிரிவை மத்​திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​தது. இதையடுத்​து,அம்​மாநிலம் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன.

மத்​திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரி கல்​வி​யாளர் ஜாஹூர் அகமது பட் மற்​றும் சமூக அரசி​யல் ஆர்​வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *