
சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞரான வாஞ்சிநாதன், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடக் கோரி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் முன்னாள் நீதிபதிகள் தலையீடு செய்யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.