• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடையும் முன்பாக பிரிவினையை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 15, 1947ல் நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரிவினையால் நிகழ்ந்த பெரும் சோகத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *