
ஏலகிரி: “தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். அம்மா மினி கிளினிக் இங்கு திறக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி சட்டப்பேரவை தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், மனுக்களாக பெற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.