
கொடைக்கானலில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்தது நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் (பேட்ஜ் ஒர்க்) பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப் அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டது.