
புதுடெல்லி: பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு ஆதாரமாக மின்டா தேவியின் வாக்காளர் அட்டையையும் வெளியிட்டு பேசினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.