
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கையாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள 102 குடும்பங்கள், திருநீர்மலை 31-வது வார்டு திருமங்கையாழ்வார்புரம், சர்வே எண் 234/2, 272 ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகள், பொழிச்சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்யப்பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.