
புவனேஸ்வர்: ஒடிசா எஸ்டி, எஸ்சி மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசியலமைப்பின் 341-வது பிரிவில் அறிவிக்கப்பட்டபடி, பட்டியலின சமூகத்தினரை ஆங்கிலத்தில் எஸ்சி எனவும் ஒடியாவில் ‘அனுசுசித ஜாதி’ எனவும் குறிப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் ஆணையர் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.