• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜப்​பானிய மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் 7 மாவட்​டங்​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. 27.63 லட்​சம் குழந்​தைகளுக்கு தடுப்​பூசி செலுத்​தும் பணியை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் விருதுநகர், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திருச்​சி, திரு​வாரூர், மதுரை, பெரம்​பலூர், அரியலூர், தஞ்​சாவூர், திரு​வண்​ணா​மலை, திரு​வள்​ளூர், புதுக்​கோட்​டை, கரூர் மாவட்​டங்​களி​லும், சென்​னை​யில் 2 மண்​டலங்​களி​லும் மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்​பாட்​டில் உள்​ளது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் இதர 13 மண்​டலங்​களி​லும், புதி​தாக செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திருநெல்​வேலி, தென்​காசி, நாகப்​பட்​டினம், வேலூர் என மொத்​தம் 7 மாவட்​டங்​களுக்கு இந்த திட்​டம் தற்​போது விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த விரி​வாக்​கத் திட்​டத்தை சென்னை ஷெனாய் நகர் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *