• August 14, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.

மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த தனி நீதிப​தி, தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​ற​வும், கொடிக் கம்​பங்​கள் வைப்​ப​தாக இருந்​தால் அரசிடம் அனு​மதி பெற்று பட்டா இடங்​களில் வைக்​க​வும் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *