
சென்னை: வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை 38 மாவட்டங்களில் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மசூதி தெருவில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தரன், மோகன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.