• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம் சனிக்​கிழமை 38 மாவட்​டங்​களில் முகாம் நடை​பெறும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று முதல்வரின் தாயு​மானவர் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதனை தொடர்ந்​து, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சைதாப்​பேட்டை மசூதி தெரு​வில் உள்ள வயது முதிர்ந்​தோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இல்​லத்​துக்​குச் சென்று அத்​தி​யா​வசிய பொருட்​களை வழங்​கி​னார். சென்னை மாநக​ராட்சி மண்​டலக் ​குழுத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்​தி, மாமன்ற உறுப்​பினர்​கள் வழக்​கறிஞர் தரன், மோகன்​குமார் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *